ஆப்நகரம்

வீர மரணமடைந்த தமிழக வீரர் ஜெகன் குடும்பத்துக்கு ஸ்டாலின் இரங்கல்!

சோகத்தின் துயரப் பிடியிலிருந்து அந்தக் குடும்பத்தை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் - ஸ்டாலின்

Samayam Tamil 10 Oct 2018, 5:41 pm
நக்சைலட்டுக்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வீர மரணமடைந்த தமிழக வீரர் ஜெகனின் குடும்பத்தாருக்கு திமுகதலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Stalin-DMK


இது குறித்து அவர் வெளயிட்டுள்ள இரங்கல் செய்தி: கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டு விளையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெகன் பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்திருக்கும் அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராணுவ வீரரின் மனைவிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு நடைபெறவிருந்த நிலையில் கணவனை இழந்து அந்தக் குடும்பம் ஒட்டுமொத்தமாக சோகத்தில் மூழ்கியுள்ளது இதயத்தை கலங்க வைக்கிறது.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள தமிழக வீரர் ஜெகனின் குடும்பத்திற்கு உரிய நிதியுதவிகளை வழங்கி, சோகத்தின் துயரப் பிடியிலிருந்து அந்தக் குடும்பத்தை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி