ஆப்நகரம்

பிச்சை எடுத்த பணத்துடன் பிரதமர் வீடு முற்றுகை? தமிழக விவசாயிகள் கைது!

பிரதமரை வீட்டை முற்றுகையிடச் சென்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

TNN 16 Sep 2017, 12:06 pm
டெல்லி: பிரதமரை வீட்டை முற்றுகையிடச் சென்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil tamil farmers arrested in delhi
பிச்சை எடுத்த பணத்துடன் பிரதமர் வீடு முற்றுகை? தமிழக விவசாயிகள் கைது!


போதிய பருவமழை இன்றி விவசாயம் பொய்த்து தமிழக விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

வாழ்வாதாரம் இன்றி, உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாருமே கண்டுகொள்ளாத நிலையில், போராட்டம் 62வது நாளை அடைந்துள்ளது. பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்று முன் தினம் விவசாயிகள் பிச்சை எடுத்தனர்.

அதன்மூலம் கிடைத்த ரூ.6,666 பணத்துடன், பிரதமர் மோடி வீட்டுக்கு சென்று ஒப்படைக்க புறப்பட்டனர். இதற்கிடையில் தமிழக விவசாயிகள் 28 பேரை தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் நாடாளுமன்ற தெரு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Tamil farmers arrested in Delhi.

அடுத்த செய்தி