ஆப்நகரம்

செத்து மடிந்து போனாலும், தமிழக மண்ணைக் காக்கின்றோம்; தமிழ் கலை இலக்கிய கூட்டமைப்பு!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் கலை இலக்கிய கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.

Samayam Tamil 26 May 2018, 1:13 pm
சென்னை: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் கலை இலக்கிய கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.
Samayam Tamil Sterlite Protest


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 100ஆம் நாள் போராட்டத்தில், ஆட்சியர் அலுவலக முற்றுகையின் போது, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அதில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு உலகத் தமிழர்கள் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா மற்றும் பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

அவர்கள் ’ஓயாதே! ஓயாதே! மக்கள் போராட்டம் ஓயாதே’ என்றும், ’நீயா நானா பார்க்கின்றோம், தமிழக மண்ணை காக்கின்றோம்’ என்றும், ’போராட்டத்தில் எங்கள் உயிர் போனால் போனால் போகிறது, செத்து மடிந்து போனாலும், கோழையாக போக மாட்டோம், மோடி ஆட்டம் செல்லாது’ என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

Tamil film directors protest against Sterlite Industry in Chennai.

அடுத்த செய்தி