ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Jan 2018, 10:59 am
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tamil fisherman arrested by sri lankan navy
தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!


இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் 12 மீனவர்களையும், அவர்களின் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து தலைமன்னார் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீர்வு காணாத பிரச்சனை!

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மீனவர்கள், இலங்கை சிறையில் இருக்கும் நிலையில் மேலும் 12 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசின் புதிய சட்டம்!

இலங்கை அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு, எல்லை தாண்டி வரக்குடிய படகுகளுக்கு 100% அபராதத்தை உயர்த்தி சட்டம் இயற்றியது. சிறைப் பிடிக்கக்கூடிய படகு உரிமையார் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராகும் படியும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போது சிறைப்படிக்கப்பட்ட மீனவர்களின் நிலை என்னவென்று தெரியத நிலையில் படகு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணும் படி மீனவர்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் வேண்டுமென்றே கைது செய்வது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி