ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் சிறையில் அடைப்பு;

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

tn 13 Sep 2017, 4:49 am
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Samayam Tamil tamil fisherman jailed
தமிழக மீனவர்கள் சிறையில் அடைப்பு;


ராமேஸ்வரம் கடற்பகுதியில் நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்து செல்லுமாறு கூறினர். சிறிது நேரத்தில், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய அவர்கள், ராமேஸ்வரம் மல்லிகைநகர் துரை என்பவருக்கு சொந்தமான இரண்டு படகுகளையும், அதில் பயணம் செய்த 12 பேரையும் சிறைபிடித்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திலுள்ள ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதிகள், 26 ம் தேதி வரை யாழ்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து 12 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி