ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் கைது; இலங்கை ராணுவம் அட்டூழியம்!

நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையிலடைத்த சம்பவம் மற்ற மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Jan 2018, 10:10 am
நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையிலடைத்த சம்பவம் மற்ற மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tamil fishermas arrested by srilankan navy
தமிழக மீனவர்கள் கைது; இலங்கை ராணுவம் அட்டூழியம்!


ராமேஸ்வரம் மண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் சிலர் இன்று அதிகாலையில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியத்ததனர். மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதபடுத்தியது மட்டுமல்லாமல், மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையிடனரின் பிடியிலிருந்து தமிழக மீனவர்கள் தப்பிக்க முயன்றனர். அப்போது கடல் தாண்டி வந்ததாக் கூறி 16 மீனவர்களையும், அவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் இன்று காலை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் மற்ற மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி