ஆப்நகரம்

அத்துமீறிய இலங்கை கடற்படை; 4 தமிழக மீனவர்கள் கைது...!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

TNN 9 Jul 2017, 7:19 am
ராமேஸ்வரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil tamil fishermen arrested by srilanka navy
அத்துமீறிய இலங்கை கடற்படை; 4 தமிழக மீனவர்கள் கைது...!


தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, சில சமயங்களில் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர். மேலும் ஆழ்கடலுக்கு சென்றால் அதிக மீன்கள் பிடிக்கலாம் என்ற எண்ணத்திலும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, தமிழக மீனவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்று விடுகின்றனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை புகார் அளித்தும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tamil fishermen arrested by Srilanka Navy.

அடுத்த செய்தி