ஆப்நகரம்

டாஸ்மாக் மூடப்படுமா? தமிழக அரசு என்ன முடிவெடுக்கும்?

20ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறியுள்ளார் ஜி.கே.வாசன்.

Samayam Tamil 12 Jan 2022, 9:04 am
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மதுக் கடைகளை வருகிற 20ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.
Samayam Tamil Tasmac


கொரோனா மூன்றாவது அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 16) முழு ஊரடங்கு, வழிபாட்டுத் தலங்களில் ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
முதல்வருக்கு ரிட்டர்ன் போன பொங்கல் பரிசு: நாம் தமிழர் தங்கை கடிதம்!
ஆனால் டாஸ்மாக் மதுபானக் கடைகளையோ, பார்களையோ மூட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டுமென்றால் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் அதிகரித்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அறிவார்ந்த அரசு இப்படி முடிவெடுக்கலாமா? -அரசுக்கு பிரபல நடிகர் 'நறுக்' கேள்வி!
ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகையால் தொடா் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் மதுக் கடைகளில் அதிகமாக மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. அதன் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவே, ஜனவரி 20-ஆம் தேதி வரை மதுக் கடைகளை முழுவதுமாக மூடவேண்டும். அப்போதுதான் அரசு எடுக்கும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கான அனைத்து முயற்சிகளுக்கும் 100 சதவீத பயன் கிடைக்கும்” என்று கூறியுள்ளாா்.

அடுத்த செய்தி