ஆப்நகரம்

அவரை சும்மா விடக்கூடாது... நடிகர் சூர்யாவுக்கு எதிராக களமிறங்கும் வழக்கறிஞர்கள்!!

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தை விமர்சித்துள்ள நடிகர் சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தொடுத்தே ஆகணும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 25 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Samayam Tamil 14 Sep 2020, 7:25 pm
நீட் தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil actor surya


இந்த சம்பவத்தையடுத்து, நீதிமன்றத்தை விமர்சிக்கும் விதத்தில் நடிகர் சூர்யா நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்துள்ளது.

நீதிமன்றத்தை விமர்சித்துள்ள சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தே ஆக வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து நீதிபதிகள் பகிரங்க கடிதம்!!

அதேசமயம், மாணவர்கள் இறந்ததால் ஏற்பட்ட கோபத்தில் சூர்யா கூறியுள்ள கருத்துக்களை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடலாம் என்று சந்துரு, ஹரிபரந்தாமன் உள்ளிட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆறு பேர், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 25 பேர், தலைமை நீதிபதிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.


தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதத்தில், " நடிகர் சூர்யாவின் கருத்து கண்டனத்துக்குரியது. நீதி பரிபாலன முறையை அவமதிக்கும் விதத்தில் உள்ளது" என்று மூத்த வழக்கறிஞரும், இந்திய வழக்கறிஞர் சங்க துணைத் தலைவருமான எஸ்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி