ஆப்நகரம்

வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் என். குமாரை புதிய துணைவேந்தராக நியமித்து கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 12 Nov 2018, 11:19 pm
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் என். குமாரை புதிய துணைவேந்தராக நியமித்து கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil tnau


கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில், புதிய துணைவேந்தரை தேடும் பணி நடந்த வந்தது. இதில் பத்து பேர் முதற்கட்டமாக பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தோட்டக்கலைத்துறையில் 22 ஆண்டுகளாக பணி அனுபவம் பெற்றவர். அதே துறையில் டீனாகும் பணிபுரிந்தவர். மேலும், வேளாண்மைத்துறையில் பதினெட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எட்டுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் பிரசுரம் செய்தவர்.

அடுத்த செய்தி