ஆப்நகரம்

இந்த தடவையும் மழை குறைவுதான்: வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவ மழை இந்த முறை சற்று குறைந்துள்ளதாகவும், ஆனால் தென் தமிழகம் நல்ல மழைப் பொழிவை பெற்றுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Nov 2019, 2:04 pm
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Samayam Tamil வானிலை ஆய்வு மையம்


இடி, மின்னல், மழை: உங்க ஊருக்கு எப்படின்னு பார்த்துக்கோங்க!

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் 7 செ.மீட்டரும், மகாபலிபுரம் சோழவரம் ஆகிய இடங்களில் 5 செ.மீட்டரும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில் 4 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இன்று வெளுத்து வாங்கும் மழை - பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசும் இருக்கும்.

சென்னையில் இன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் வடகிழக்கு பருவமழை அளவு இந்த முறையும் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பாக 31 சதவீதம் பெய்திருக்க வேண்டிய நிலையில் 28 சதவீதமே பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் 51 சதவீதம் பெய்திருக்க வேண்டிய மழை 30 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது. 41 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த வருஷம் பிரச்சினை இல்லை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை!

வட கிழக்கு பருவமழை வட தமிழகத்தைவிட தென் தமிழகத்தில் அதிகமாக பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 சதவீதம் பெய்ய வேண்டிய நிலையில் 44 சதவீதம் மழை பெய்துள்ளது. இது 34 சதவீதம் அதிகமாகும். இதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழையின் அளவு முறையே 29 %, 23% அதிகரித்துள்ளது. நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மழை பரவலாக பெய்யக்கூடும். அப்போதும் தென் தமிழகத்துக்கே அதிக வாய்ப்புள்ளது” என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி