ஆப்நகரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி: என்ன சொல்றீங்க... நிஜமாவா?

வரும் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 14 Jan 2021, 3:17 pm
2021ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் கூட்டணிக் கணக்குகளை சரிபார்த்து வருகின்றன. 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அதிமுக, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ஆட்சியை கைப்பற்ற திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தல் இதுவரை தமிழகம் காணாத புதுமையான தேர்தல் என்பதில் சந்தேகமில்லை.
Samayam Tamil TN Assembly Election 2021


ஏனெனில் பிரதான திராவிடக் கட்சிகளின் ஆளுமைமிக்க தலைவர்கள் யாரும் இல்லை. எனவே அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கும் களமாக நடைபெறவுள்ள தேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி கற்கும் முறையே தலைகீழாக மாறியிருக்கிறது. இவர்களுக்கு வழக்கமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள், செமஸ்டர்கள் நடத்தப்படும்.

ராகுல் காந்தியை நோக்கி ஓடிவந்த காளை; அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரசியம்!
ஆனால் இம்முறை தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே பொதுத்தேர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உடன் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைத்தல், அதற்கான இடங்களை தேர்வு செய்தல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை மும்முரமாக செய்து வருகிறது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தலின் போது மத்திய பாதுகாப்பு படையினரின் தேவை குறித்து மத்திய அரசுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

நானே வருவேன்: போஸ்டரிலேயே தனுஷை வைத்து வித்தை காட்டும் செல்வராகவன்
வழக்கமாக ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். இந்நிலையில் வரும் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்த்தால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி