ஆப்நகரம்

அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாத காலம் நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்!

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும், 6 மாத காலம் நீட்டிப்பதற்கான 2 மசோதாக்கள் சட்டசபைலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jan 2019, 6:10 am
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும், 6 மாத காலம் நீட்டிப்பதற்கான 2 மசோதாக்கள் சட்டசபைலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil elec


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், பெண்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பரிந்துரைகளை தமிழ்நாடு வரையறை ஆணையம் வழங்க வேண்டும். அதன் பிறகு தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிடும்.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த இயலவில்லை. அதற்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் 30ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு நீட்டிக்க புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவிற்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள் இல்லாததால், எதிர்ப்பின்றி 2 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி