ஆப்நகரம்

இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்; எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகள் என்னென்ன?

பரபரப்பான சூழலில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

Samayam Tamil 14 Sep 2020, 6:59 am
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது போதிய சரீர இடைவெளி. இதனைக் கருத்தில் கொண்டு வழக்கமாக கூட்டத்தொடர் நடைபெறும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அல்லாமல், இம்முறை கலைவாணர் அரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது தளத்தில் எம்.எல்.ஏக்கள் போதிய இடைவெளி விட்டு அமரும் வண்ணம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் மாற்று இடத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil TN Assembly Session


சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வருகை புரியும் அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளின் அடிப்படையில் சட்டமன்றம் வருகை புரிவோருக்கு தற்காலிக அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதை அனைவரும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் நடைபெறுவதை ஒட்டி கலைவாணர் அரங்கப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? என்ன சொல்கிறார் பாஜக தலைவர் எல்.முருகன்!

இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், மக்களவை எம்.பி வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

நடப்பு கூட்டத்தொடரில் நீட் தேர்வு மரணங்கள், கொரோனா தடுப்பு பணிகள், பிரதமரின் கிசான் திட்ட முறைகேடுகள் உள்ளிட்டவை முக்கிய பிரச்சினைகளாக எழுப்பப்படக் கூடும். இந்நிலையில் 2020-21ஆம் ஆண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. கடைசி நாளன்று கேள்வி நேரம் இடம்பெறவுள்ளது.

அடுத்த செய்தி