ஆப்நகரம்

துருக்கியில் தவித்த தமிழக தடகள வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்

துருக்கியில் ராணுவ புரட்சியால், அங்கு தவித்த தமிழக விளையாட்டு வீரர்கள் 7 பேர் சென்னை வந்தடைந்தனர்.

TNN 19 Jul 2016, 6:00 pm
சென்னை : துருக்கி ராணுவ புரட்சியால், அங்கு தவித்த தமிழக விளையாட்டு வீரர்கள் 7 பேர் சென்னை வந்தடைந்தனர்.
Samayam Tamil tamil nadu athletes stranded in turkey reach chennai
துருக்கியில் தவித்த தமிழக தடகள வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்


துருக்கி, டர்ப்ஜனில் நடைபெற்ற சர்வதேச பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக, இந்தியா சார்பாக 149 தடகள வீரர்கள் மற்றும் 38 அதிகாரிகள் துருக்கி சென்றனர். இந்நிலையில் அங்கு ராணுவ புரட்சி வெடித்தது. பதற்றமான சூழல் ஏற்பட்டதால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அங்கு சென்றிருந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பாகவுள்ளதாக மத்திய அரசு தெரிவிதது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் துருக்கியிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த சாண்ட்ரா, அஜித் குமார், நவீன், மணிதமிழ் செல்வி, ஹேமமாலினி,பூபேஷ் குமார், பிரியதர்ஷினி ஆகிய தடகள வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். வீராங்கனை சம்யாஸ்ரீ மட்டும் டெல்லியிலிருந்து அவரது சொந்த ஊரான கோவைக்கு நேரடியாக சென்றடைந்தார்.

அடுத்த செய்தி