ஆப்நகரம்

நாளை முழு அடைப்பு: தனியார் பள்ளிககளுக்கு விடுமுறை

காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வணிகர்கள் சங்கங்களின் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 15 Sep 2016, 12:18 pm
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வணிகர்கள் சங்கங்களின் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tamil nadu bandh tomorrow holiday announced for private schools
நாளை முழு அடைப்பு: தனியார் பள்ளிககளுக்கு விடுமுறை


இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்கவும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமையை வன்மையாக கண்டித்தும், காவிரி நீர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணவும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக நந்தகுமார் கூறியுள்ளார்.

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகாவில் தமிழகத்துக்கு எதிராக நடந்த வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், வணிகர் சங்கங்களும் ஆதரவளிக்கும் நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள், தனியார் பள்ளி வாகன உரிமையாளர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறைக்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளைக்கு பதிலாக சனிக்கிழமை பள்ளிகள் இயக்கப்படும் என்றும், நடைபெற்று வரும் காலாண்டுத் தேர்வும் நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி