ஆப்நகரம்

'மற்ற மதத்தினரையும் நம் வழிபாட்டிற்கு அழையுங்கள்': அண்ணாமலை வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Sep 2021, 8:42 pm
தமிழகத்தில் வரும் 10ம் தேதி (நாளை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


அதில் அவர் கூறியுள்ளதாவது, ''விநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள்படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்த சக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயக பெருமாள் அவதரித்த தினத்தையே நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.

நாம் எந்த ஒரு செயலை செய்ய தொடங்கினாலும் விநாயகரை மனதார நினைத்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும். ஆகையினாலேயே எழுத தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகிறோம்.

பாஜக சார்பில் ஒரு லட்சம் வீடுகளில் வாசலில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் திரு அகவல் பாடி வழிபட இருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் வாசலில் உங்கள் கோலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து வழிபடுங்கள்.

ரூ. 7000 வரை கல்வி உதவித்தொகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!

வல்லப கணபதியை உங்கள் வாசலுக்கு வரச்சொல்லுங்கள். ''பாலும், தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா'' என்று பாடிய ஒளவையார் இயற்றிய விநாயகர் அகவலை படிப்போம்.

மற்ற மதத்தினரையும் நம் வழிபாட்டிற்கு அழையுங்கள். விநாயகர் சிலைகளை மரபுப்படி நீங்களே சென்று நீர்நிலைகளில் கரையுங்கள்.

விநாயகரை நினைத்து செய்யும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் சிறப்பாக முடித்து தருவார் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்'' என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி