ஆப்நகரம்

தமிழக எல்லைகள் மூடல்: முதல்வர் அதிரடி உத்தரவு!!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கிய முடிவாக, தமிழகத்தின் எல்லைகள் மூடப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 20 Mar 2020, 8:25 pm
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil தமிழக எல்லைகள் மூடல்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!


பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட இடங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுல இன்னொரு கொரோனா பரிசோதனை மையம்: எங்கே தெரியுமா?

இப்படி கொரோனா வைரஸ் தடுப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக அரசு இன்று மற்றுமொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் நாளை முதல் இம்மாதம் 31 ஆம் தேதிவரை மூடப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதாவது கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடனான, தமிழகத்தின் எல்லைகள் நாளை முதல் மூடப்படும்.

வெளிமாநிலங்களில் இருந்து பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். குறிப்பிட்ட வாகனங்களில் வரும் ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

குறிப்பிட்ட நாள்களில் குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்திகள் ஆகிய மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில எல்லைகளை மூடுவது என்பன உள்ளிட்ட பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளன.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்