ஆப்நகரம்

பஸ் ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வர முதல்வருடன் ஸ்டாலின் தொலைபேசி வலியுறுத்தல்!!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 6 Jan 2018, 12:37 pm
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil tamil nadu bus strike dmk working president mk stalin has spoken with cm edappadi palanisamy on phone
பஸ் ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வர முதல்வருடன் ஸ்டாலின் தொலைபேசி வலியுறுத்தல்!!


இதுதொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போக்குரவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து முதல்வர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்றும் தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு தொலைபேசியில் முதல்வர் பழனிச்சாமியை தொடர்பு கொண்டு ஸ்டாலின் பேசியதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி