ஆப்நகரம்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நாளை அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Samayam Tamil 10 Apr 2020, 2:40 pm
தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பதை குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதை குறித்தும், தற்போதைய நிலையை குறித்தும் முதல்வர் பழனிசாமி, மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil நாளை அமைச்சரவை கூட்டம்


ஊரடங்கு உத்தரவை உதாசீனப்படுத்தினால் பைக், கார் பறிமுதல்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இந்த நிலையில் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர். அதே சமயம் நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி