ஆப்நகரம்

‘கடவுளின் பெயரால்...’ தலைமை நீதிபதியாக அமர்த்தப்பட்டார் ஏ.பி.சாஹி!

குடியரசுத் தலைவர் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் 49வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார் ஏ.பி. சாஹி...

Samayam Tamil 11 Nov 2019, 10:31 am
தமிழ்நாடு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த தஹில் ரமணியை, மேகாலயா நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த சில மாதங்களுக்குமுன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் பணியிட மாற்றினார். தமிழ்நாட்டின் நீதிபதியாகப் பொறுப்பு வகித்து வந்த தஹில் ரமணியைச் சிறிய நீதிமன்றத்து மாற்றியதன் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், தனது பதவியை தஹில் ரமணி ராஜினாமா செய்தார்.
Samayam Tamil Dkn_Tamil_News_2019_Nov_3__652721583843232


அதன்பின், கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் தலைமை நீதிபதியாக, பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ பி சாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் உத்தரவிட்டார். அதன்படி, ஏ பி சாஹிக்கு நவம்பர் 13ஆம் தேதிக்குள் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவி பிராமணம் செய்து வைக்க வேண்டும்.

காங்கிரஸ் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்குமா? டெல்லியில் ஆலோசனை!

இந்நிலையில், இன்று காலை 9:30 மணியளவில், தமிழ்நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக ஏ பி சாஹியை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். “கடவுளின் பெயரால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பேன்” என ஏ பி சாஹி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

ஏ பி சாஹி பதவி பிராமான நிகழ்ச்சி மேடையில், தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி, சட்டசபை சபாநாயகர் தன்பால், சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பதவி பிரமானம் முடிந்தபின், முதல்வர் பழனிசாமி, தலைமை நீதிபதிக்குச் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

சிவசேனா - பாஜக கூட்டணி முறிந்தது!

ஏ பி சாஹி கடந்த ஓராண்டாக பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்தவர். அதற்குமுன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியில் இருந்தவர். இவர் வழக்கறிஞராக இருந்த காலகட்டத்தில் சிவில், அரசியல் துறைகளில் வல்லுநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி