ஆப்நகரம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பரபரப்பான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 15 Dec 2016, 5:14 pm
சென்னை: தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பரபரப்பான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tamil nadu chief minister caught in traffic jam in chennai
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


தமிழக முதலமைச்சராக இருப்பவர்கள், சென்னை மாநகரில் செல்வதற்கு போக்குவரத்து நிறுத்து வைக்கப்படும். முதலமைச்சரின் வாகனம் சேர வேண்டிய இடத்தை அடைந்த பின்னே, போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த காட்சியை தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழக மக்கள் பார்த்திருப்பார்கள்.

ஆனால் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சேமியர்ஸ் சாலையில் நந்தனம் அருகே 15 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். வர்தா புயல் பாதிப்பு காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றனர்.

நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா சாலை, தியாகராஜா சாலை, சேமியர்ஸ் சாலை, சாந்தோம் சாலை மரங்கள் விழுந்ததால், அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து காவலர்கள் களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

O Panneerselvam, who was sworn in as the chief minister on December 7, was caught in a traffic jam on Chamier's Road in Nandanam for about 15 minutes.

அடுத்த செய்தி