ஆப்நகரம்

முதல்வர் குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

Samayam Tamil 17 Nov 2020, 12:11 pm
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார்.
Samayam Tamil edappadi palanisamy


அங்கு முதலமைச்சர் பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலும் சாமி தரிசனம் செய்தார்.

அத்துடன் இன்று அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் கலந்து கொண்டு முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

சபரிமலை பக்தர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் திருப்பதியில் அவர் தேர்தல் வெற்றிக்காக பிரார்த்தனை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஜெயலலிதா போன்று அதிமுகவின் அதிகாரமிக்க தலைவராக தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளவும் பிரார்த்திப்பார் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி