ஆப்நகரம்

வாத்தி ரெய்டு..! - அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்!

அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Samayam Tamil 27 Oct 2021, 4:07 pm

ஹைலைட்ஸ்:

  • பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
  • மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதைஆய்வு செய்தார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil MK Stalin Inspection
செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, விழுப்புரம் மாவட்டம், முதலியார் குப்பத்தில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகச் செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தில் உள்ள பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, முதலமைச்சரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெர்னாஸ் ஜான், இப்பள்ளியில் மொத்தம் 488 மாணவர்கள் படித்து வருவதாகவும், தற்போது 9 முதல் 12ம் வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும், மாணாக்கர்கள் வருகை சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு பச்சைக்கொடி!
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வகுப்பறைகளுக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களிடம் உரையாடினார். கல்வியில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு, ஆசிரியர்கள், மாணாக்கர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர், பள்ளியின் அனைத்து வகுப்பறைகள், ஆய்வகம், உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டதோடு, மாணாக்கர்களுக்கு தினசரி உணவு வழங்கும் பட்டியலில் உள்ளவாறு மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில், உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி