ஆப்நகரம்

விமர்சனங்களுடன் வந்திறங்கிய ஆர்.என். ரவி: வரவேற்ற முதல்வர்

புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஆர்.என்.ரவியை தமிழக முதல்வர் ஸ்டாலின் விமான நிலையம் சென்று வரவேற்றார்.

Samayam Tamil 17 Sep 2021, 7:58 am
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி நேற்று இரவு (செப்டம்பர் 16) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவை சகாக்களோடு நேரில் சென்று வரவேற்றார்,.
Samayam Tamil mk stalin rn ravi


தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது நாகாலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டின் ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.

முதல்வராக முதன்முறையாக பதவியேற்று நான்கு மாதங்களில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெறும் வகையில் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு உள்ளது. அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
EXCLUSIVE: கே.சி.வீரமணி சிக்கியது எப்படி? பின்னணி தகவல்!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி உளவுத்துறையில் பணியாற்றியவர். கல்வியாளர்கள், அரசியலமைப்பு சட்ட அனுபவம் பெற்ற மூத்த அதிகாரிகள் ஆளுநராக நியமிக்கப்பட்டு வந்த நிலையில் ஓர் உளவுத்துறை அதிகாரி தமிழ்நாட்டுக்கு ஏன் ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி சந்தேகம் தெரிவித்தார். புதுச்சேரியில் போலீஸ் அதிகாரி கிரண் பேடி ஆளுநராக நியமிக்கப்பட்டு மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்தத்தை குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ஆளுநர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக அரசை உளவு பார்த்து டெல்லிக்கு தகவல் அனுப்புவதற்காகவே ரவி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சென்னை வருவதற்கு முன்பே அரசியல் வட்டாரத்தில் அதிரச் செய்த ஆளுநர் ரவி நேற்று இரவு சென்னை விமானநிலையம் வந்தார். அவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
முன்னாள் அமைச்சரை அணைத்துக் கொண்ட திவாகரன்
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு , தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழகத்தின் 25ஆவது ஆளுநராக வந்திருக்கும் ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி நாளை (செப்டம்பர் 18) பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

அடுத்த செய்தி