ஆப்நகரம்

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது

Samayam Tamil 28 Nov 2019, 4:51 pm
சென்னை: ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


நாடு முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் இருந்தது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது என கூறி வந்த மத்திய அரசு, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் சட்டதிருத்ததை கொண்டு வந்து அதனை அரசிதழில் வெளியிட்டது.

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு

அதன்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாய பொதுத்தேர்வு நடத்தப்படும். இதில் தோல்வியுறும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களில் மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தோல்வியுற்றால் அதே வகுப்பிலேயே அவர்கள் தொடர வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான கட்டாய பொதுத்தேர்வு முறைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

பொதுத்தேர்வு அட்டவணை


பொதுத்தேர்வு அட்டவணை


இந்நிலையில், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8 ஆம் வகுப்பு தேர்வு 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும். 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும்.

அடுத்த செய்தி