ஆப்நகரம்

தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயம்!

புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

Samayam Tamil 26 Nov 2019, 9:05 am
புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
Samayam Tamil tamil nadu cm edappadi k palaniswami inaugurates kallakurichi district today
தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயம்!


தென்காசி உதயமானது

தமிழகத்தில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசியை முதலமைச்சர் பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்துள்ள 34வது மாவட்டமான கள்ளக்குறிச்சியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

கள்ளக்குறிச்சி இன்று உதயம்

இதற்கான விழா இன்று காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சியில் உள்ள சாமியார் மடம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். புதிய மாவட்டத்திற்கான அரசாணை கடந்த 13ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

புதிய அலுவலகங்கள் திறப்பு

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண்குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு 2 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், 3 காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 3 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 6 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மக்களவை தொகுதியும் இன்று உதயமாகிறது.

இன்று அடிக்கல்

இந்த மாவட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய வட்டங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய மாவட்டத்திற்கான நலத்திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். ஏற்கனவே முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கல்லூரி புதுப்பிப்பு

இதையடுத்து விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

விவசாயம் பிரதானம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் 1,600 சதுர கி.மீ பரப்பளவில் 13 லட்சம் மக்கள் தொகையுடன் காணப்படுகிறது. இதன் முக்கிய தொழில் விவசாயம். இந்த பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், பருத்தி, கம்பு, உளுந்து ஆகியவற்றை பயிரிடுகின்றனர்.

கரும்பு ஆலைகள்

கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால் கரும்பு ஆலைகள் ஏராளமாக இருக்கின்றன. இதேபோல் அரிசி ஆலைகளும் அதிகமாக காணப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் கோமுகி, மணிமுத்தா அணைகள் இருக்கின்றன.

கல்வராயன் மலை

இங்குள்ள கல்வராயன் மலை சுற்றுலா பயணிகள் பெரிதும் ஈர்க்கிறது. சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த செய்தி