ஆப்நகரம்

ரேபிட் கிட் போதாது: பிரதமரிடம் திட்டவட்டமாக தெரிவித்த முதல்வர்!!

கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்கள் போதாது என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Apr 2020, 8:28 pm
தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ரேபிட் கிட்கள் போதாது என்றும், அவற்றை அதிக அளவில் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil modi edappadi


பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா வைரஸ பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

கொரோனாவுக்கு ஜாதி இல்லை, மதமும் இல்லையே... மோடி ட்வீட்

மேலும், தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தங்களுக்கு அதிகபடியான ரேபிட் கிட்களை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர், ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று பரிசோதனைக்காக, 24 ஆயிரம் எண்ணிக்கையிலான ரேபிட் டெல்ட் கிட்களை தமிழகத்துக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் ( ஏப்ரல் 17) அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி