ஆப்நகரம்

அயோத்தியில் ராமர் கோயில்: அன்றே சொன்னார் ஜெயலலிதா... சுட்டிக்காட்டும் முதல்வர் பழனிசாமி!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாளை (5.8.2020) நடைபெற உள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு தமது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்..அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று 1992 ஆம் ஆண்டே மறைந்த முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார் என்றும் முதவ்வர் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

Samayam Tamil 4 Aug 2020, 8:08 pm
1992 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேத நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்”, என்று வலியுறுத்திப் பேசியிருந்தார்.
Samayam Tamil edappadi palanisamy


அதே சமயம், மசூதியும் அயோத்தியில் இருக்க வேண்டும் எனவும் அவர் விரும்பினார்.இதன் மூலம், தேசிய ஒற்றுமைக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும் ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை அவர் விரும்பினார் என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சுமூகமான சூழல் ஏற்பட்டது.

நாளை ராமர் கோவில் பூமி பூஜை - பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

இதையடுத்து மத்திய அரசு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற ஹிந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி