ஆப்நகரம்

ஜெயலலிதா ஸ்டைலில் கதையுடன், அவரது இடத்தைப் பிடித்த முதல்வர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியில், ஒரு குட்டி கதை சொல்லி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் அவரின் இடத்தை பிடித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

TNN 21 Jun 2017, 7:48 pm
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியில், ஒரு குட்டி கதை சொல்லி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் அவரின் இடத்தை பிடித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Samayam Tamil tamil nadu cm edappadi palanisamy participate in iftar party
ஜெயலலிதா ஸ்டைலில் கதையுடன், அவரது இடத்தைப் பிடித்த முதல்வர்


சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் செண்டரில், தமிழக அரசு சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு தலைமை பேசினார்.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு ஒரு குட்டி கதைகூறு அசத்துவது வழக்கம். அவரின் பாணியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழனிச்சாமி ரமலான் மாத சிறப்பு குறித்த குட்டி கதை கூறினார்.
அதன் பின்னர் நோன்பு திறக்கும் நிகழ்வு நடந்தது.

அடுத்த செய்தி