ஆப்நகரம்

தமிழகம் நல்ல பெயர் வாங்குவதற்காக இரவு பகலாக பாடுபடுகிறோம்: முதல்வர் பழனிசாமி

அனைத்துத் துறைகளும் வளர்ந்து இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகின்றது என்ற நல்ல பெயரை எடுப்பதற்கு இரவு, பகல் பாராமல் பாடுபடுவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Nov 2018, 6:54 pm
அனைத்துத் துறைகளும் வளர்ந்து இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகின்றது என்ற நல்ல பெயரை எடுப்பதற்கு இரவு, பகல் பாராமல் பாடுபடுவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
Samayam Tamil palanisamy smile


சேலம் மாநகர் இரும்பாலை சாலை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் மற்றும் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

'வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர் வழங்கப்படுகிறது. கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் மூலமாக விவசாயிகள் செய்கின்ற விளைச்சலை பெருக்கவேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதேபோல, பால் உற்பத்தியில் தன்னிறைவை பெற்றிருக்கின்றோம், அந்தளவிற்கு பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவி செய்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த வேண்டுமென்பதற்காக ஏழை எளிய சிறு, குறு விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் கொடுத்திருப்பதன் மூலமாக இன்றைக்கு பால் உற்பத்தி அதிகமாகியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் வாடிநகின்ற விவசாய பெண் தொழிலாளர்களுக்கு ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வளர்ப்பதற்கு கோழிகள், கோழிக்குஞ்சு கொடுக்கின்றோம். கிராமப்புற காய்கறி வளர்ப்புத் திட்டத்தை உருவாக்குவதற்காக தமிழக அரசு திட்டம் தீட்டி, மக்களுக்கு கத்தரி, தக்காளி, மிளகாய் போன்றவற்றிற்கு தேவையான விதைகளை கொடுக்கின்றோம்.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும், தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்கள் கிடைக்க வேண்டும், கடைக்கோடியில் இருக்கின்ற சாதாரண ஏழைக்குக் கூட அரசாங்கத்தினுடைய திட்டங்கள் சென்று சேருகின்ற அளவிற்கு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு உயர்மட்டப் பாலங்கள், சாலைகள் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம், கூட்டுக் குடிநீர் திட்டம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம், புதிய மருத்துவமனைகள் திறப்பு விழா செய்து கொண்டிருக்கின்றோம், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம், வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்கின்ற பழங்கள், காய்கறிகளை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இப்படி அனைத்துத் துறைகளும் வளர்ந்து இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகின்றது என்ற நல்ல பெயரை எடுப்பதற்கு இரவு, பகல் பாராமல் ஜெயலலிதாவின் அரசு பாடுபடும். மக்களுடைய நல்லாதரவை பெறும்’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

அடுத்த செய்தி