ஆப்நகரம்

யார் காலையோ பிடித்து முதல்வர் ஆனவர்: எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்!

புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு சிவாஜி கணேசன் நிலைதான் ஏற்படும் என்றுகூறி கிண்டலடித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Nov 2019, 4:40 pm
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 12) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, அவர் ரஜினி, கமல் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி


“வயதாகிவிட்டது இனித் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்பதால், ரஜினி, கமல் போன்றவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இப்போது கட்சி ஆரம்பிக்கும் இவர்கள் இத்தனை நாள் எங்கு சென்றிருந்தார்கள்? புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு சிவாஜி கணேசன் நிலைதான் ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ரஜினி, கமல் அரசியல் ரகசியத்தை உடைத்த எடப்பாடி

இந்நிலையில் சிவாஜி கணேசன் குறித்து விமர்சனம் வைத்ததற்கு சிவாஜி நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரன், “வயதானபிறகு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று இவருடைய கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரையும் சேர்த்துதான் தமிழக முதல்வர் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி இருந்தபோது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வெற்றிபெறவைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி என்பதை தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை?

மேலும் அவர், “நடிகர் திலகம் சிவாஜி கட்சி ஆரம்பித்தது மற்றும் தோல்வி அடைந்ததற்குக் காரணமே தன்னுடைய உடன்பிறவா சகோதரராகப் பழகிய எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி அவருடைய துணைவியார் ஜனகி அவர்கள் தலைமையில் தொடரவேண்டும் என்பதற்காகத்தான் என்ற வரலாறை, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறும் தமிழக முதல்வர் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திருமாவளவன்

“நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றிக் குறை கூறுவதற்கு, யார் காலையோ பிடித்து முதல்வர் பதவியில் அமர்ந்த இவருக்கு எந்த அருகதையும் இல்லை” என காட்டமாக தனது எதிர்ப்பை சந்திர சேகரன் பதிவுசெய்துள்ளார்.

அடுத்த செய்தி