ஆப்நகரம்

இசை உலகிற்கு இறைவன் அளித்த கொடை எஸ்பிபி... முதல்வர் பழனிசாமி புகழாரம்

இந்திய இசை உலகிற்கு 20 ஆம் நூற்றாண்டில். இறைவன் அளித்த கொடை எஸ்,பி. பாலசுப்ரமணியம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

Samayam Tamil 25 Sep 2020, 3:52 pm
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil spb demise


அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், " எஸ்பிபியின் குரல் இனிமைக்கு நிகர் அவரே. மிக அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்து புகழின் உச்சிக்கு சென்றவர். பாடகர், நடிகர், பின்னணி குரல் கலைஞர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

தேசிய விருது, பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள், பல மாநில அரசு விருதுகள், கலைமாமணி விருது என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். இந்திய இசை உலகிற்கு 20 ஆம் நூற்றாண்டில் இறைவன் அளித்த இனிய கொடை எஸ்பிபி.

வசீகர குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர்... எஸ்பிபிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழாரம்

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், ரசிக பெருமக்கள் என்று அனைவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா எல்லாம்வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி