ஆப்நகரம்

தீ விபத்தில் மரணமடைந்த நியூஸ் ஜெ செய்தியாளர் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி!!

சென்னையில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்த நியூஸ் ஜெ செய்தியாளர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 3 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.

Samayam Tamil 29 Jun 2019, 12:09 pm
Samayam Tamil Prasanna 1

இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த பிரசன்னா மற்றும் அவரது மனைவி அர்ச்சனா மற்றும் அவரது தாயார் ரேவதி ஆகியோர் கடந்த 26ஆம் தேதி பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தனர்.

அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் ஒழுங்குபடுத்துவதில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துதல் மற்றும் மாநில அளவிலான பண பரிவர்த்தனையில் மின்னணு கட்டண ரசீது வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார். 5 போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் கட்டணம் செலுத்தும் கையடக்கக் கருவிகளை வழங்கி துவக்கி வைத்தார்.

நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட மின்னணு பரிமாற்ற மூலம் கட்டணம் பெரும் 750 கையடக்க கருவிகளின் பராமரிப்பு மற்றும் சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமும் பாரத ஸ்டேட் வங்கியிடம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி