ஆப்நகரம்

தமிழகத்திற்கு மீண்டும் ஊரடங்கா; முதல்வர் எடுக்கப் போகும் முடிவு என்ன?

அடுத்தகட்டமாக ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவெடுக்க முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 24 Jan 2021, 2:24 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. பின்னர் வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் முகக்கவசம் அணிதல், போதிய சரீர இடைவெளி, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இன்று (ஜனவரி 24) காலை நிலவரப்படி கோவிட்-19 பாதிப்பு பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.
Samayam Tamil TN Lockdown Relaxation


இதுவரை 8,34,171 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 8,08,377 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 4,984 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். கொரோனா பாதிப்பால் 12,309 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 1.6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி; பிப்ரவரியில் இப்படியொரு முரட்டு மழையா?
கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்னுதாரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், அடுத்தகட்ட தளர்வுகள் என்னென்ன ஆகியவை குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.

சிம்புவுக்கு பாசமாக ஊட்டிவிடும் அம்மா: வைரல் வீடியோ
மேலும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முதல்வர் பழனிசாமி கேட்டறிகிறார். இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு பெரிதும் குறைந்துள்ளது. பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். எனவே மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி