ஆப்நகரம்

முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது எவ்வாறு இருக்கிறார்?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 1 Nov 2016, 11:01 am
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tamil nadu cm jayalalithaa health updates
முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது எவ்வாறு இருக்கிறார்?


உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் இவருக்கு டாக்டர் சிவகுமார் தலைமையிலான டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்தது. இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் மற்றும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இவருக்கு தற்போது சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் பிசியோதெரபிஸ்ட்களான மேரி மற்றும் சீமா ஆகிய பெண் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவ்வப்போது லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதலமைச்சருக்கு தற்போது எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு சுவாசக் கோளாறு காரணமாக டிரக்கியாஸ்டமி என்ற முறையில் கழுத்துக்கு கீழே துளையிட்டு ஒரு குழாய் செருகப்பட்டு அதன் வழியே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது. தற்போது இவை அனைத்தும் நீக்கப்பட்டு அவர் இயற்கையாகவே சுவாசிப்பதற்கான முயற்சியில் டாக்டர்கள் குழு ஈடுபட்டு வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில், இன்னும் பத்து நாட்களுக்குள் சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெயலலிதாவிடம் இடதுகை பெருவிரல் ரேகை வாங்கி இருந்த சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பி.பாலாஜி கூறியதாக வெளியாகியிருந்த செய்தியில், ''முதல்வர் நன்றாக இருக்கிறார். எழுந்து உட்காருகிறார். நன்றாக பேசுகிறார். கை வழியாக மருந்துகள் செலுத்தப்படுவதால் கைகளில் வீக்கம் வலி இருக்கிறது. அதனால்தான் அவரால் பேனாவைப் பிடித்து கையெழுத்து போட முடியவில்லை. அதனால்தான் இடதுகை பெருவிரல் ரேகை வைத்தார். அவர் என்னிடம் நன்றாக பேசினார்'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்தான் அவர் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி