தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் தினசரி வருகை புரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாள்தோறும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த சில நாட்களில் பிளஸ் 2 மதிப்பெண் விவரம் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் திறப்பு குறித்து நாளை (ஜூலை 16) முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. முதல்வர் கையில் இறுதி முடிவு
அதில், பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் எடுக்கப்படும் முடிவுகள் பள்ளிக் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடவுள்ளார்.
பணிநியமன ஆணைகள்
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15.7.2021) தலைமைச் செயலகத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் விதமாக
கருணை அடிப்படையில் பணி
250 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிட இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும், பொது நூலகத் துறையில் பணியாற்றிட 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நூலகர் பணியிடத்திற்கும்,
ஒரு பணியாளரின் வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும் என மொத்தம் 261 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அதில், பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் எடுக்கப்படும் முடிவுகள் பள்ளிக் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடவுள்ளார்.
பணிநியமன ஆணைகள்
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15.7.2021) தலைமைச் செயலகத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் விதமாக
கருணை அடிப்படையில் பணி
250 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிட இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும், பொது நூலகத் துறையில் பணியாற்றிட 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நூலகர் பணியிடத்திற்கும்,
ஒரு பணியாளரின் வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும் என மொத்தம் 261 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.