ஆப்நகரம்

அதிகாரிகளுக்கு ஸ்டாலின் ரகசிய உத்தரவு: யாருக்கு போட்ட ஸ்கெட்ச்?

அதிகாரிகளுக்கு வாய்மொழியாக சில உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 12 May 2021, 2:52 pm
திமுக அரசின் ஆரம்பகட்ட செயல்பாடு மிகவும் பாசிட்டிவாக இருப்பதாக அனைத்துத் தரப்பிலிருந்தும் கமெண்டுகள் வந்துகொண்டிருக்கின்றன.
Samayam Tamil mk stalin


கொரோனா தடுப்பில் முதல்வர் காட்டும் வேகம், விமர்சனங்களை உள் வாங்கிக் கொண்டு உடனடியாக செயலாற்றுவது, கோரிக்கைகள் வைப்பது குழந்தைகள் என்றாலும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பது என பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
கொரோனா இழப்பீடு 25 லட்சம் ரூ: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
இதில் முக்கியமானதாக பலரும் கூறுவது அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இட்ட உத்தரவுதான். உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும், காவல்துறையை தவறாக பயன்படுத்த நினைக்க கூடாது, எதற்காகவும் யாருக்காவும் பரிந்துரை செய்ய கூடாது , இந்த பொறுப்புக்காக வெளியே பலர் காத்திருக்கின்றனர். எனவே பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் அமைச்சர்கள் மத்தியில் பேசியதாக தகவல்கள் வந்தன.

உயர் மட்ட அளவில் முக்கிய அதிகாரிகளை நியமித்து கவனம் ஈர்த்துவருகிறார். அமைச்சர்களைப் போல அதிகாரிகளுக்கும் ஸ்டாலின் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாராம். அமைச்சர்கள் எந்தக் கோப்புகளில் கையெழுத்திட்டாலும் அதுபற்றிய தகவல் முதல்வர் அலுவலகத்துக்கு தெரியும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முழு ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள்: இன்று முதல் அமல்!

உயர்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டது போல் துறை சார்ந்த செயலாளர்களும் பலர் மாற்றப்பட உள்ளதாகவும் அதற்கான உத்தரவுகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞரின் பொற்கால ஆட்சியை அமைப்பேன் என ஸ்டாலின் கூறிவந்தாலும் அதற்காக அவர் பின்பற்றுவது என்னவோ ஜெயலலிதா பாணியைத் தான். அமைச்சர்கள் ஒவ்வொரு பகுதியிலும் குறுநில மன்னர்களாக செயல்படுவதை தடுத்து அவர்களை கண்காணித்து கடிவாளம் போட அதிகாரிகளுக்கு முக்கிய அதிகாரங்களை கொடுப்பதாக கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி போட்ட குண்டு: இனி சசிகலா வர வாய்ப்புள்ளதா?

“கொஞ்சம் சறுக்கினாலும் அதை பூதாகரமாக காட்ட ஒரு கூட்டம் திட்டமிட்டுவருகிறது. அதற்கு இடம் கொடுக்காமல் முதல்வர் பணிகளை மேற்கொள்கிறார்” என்றும் கூறுகிறார்கள் திமுக வட்டாரத்தில்.

அடுத்த செய்தி