தமிழகத்தில், கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் தொடர்பாக, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 14 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை வேகமாகப் பரவியது. இதை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தது. கொரோனா பரவல் குறைந்து வந்ததன் காரணமாக, கடந்த ஜனவரி மாத இறுதியில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 1 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கவும், இதே போல் கல்லூரிகளை திறக்கவும் உத்தரவிட்டார். இந்த தளர்வுகள் வரும் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், வரும் 15 ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றுவது, நோய்த் தொற்றின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை வேகமாகப் பரவியது. இதை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தது.
இந்நிலையில், வரும் 15 ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றுவது, நோய்த் தொற்றின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.