டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய நான்கு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். குறிப்பாக தமிழகத்தின் பொருளாதாரம் ஆனது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை பெரிதும் சார்ந்திருக்கிறது. இதில் ஏற்பட்ட பாதிப்புகள் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது. எனவே இந்த துறைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. வாழ்வாதாரம் பாதிப்பு
தமிழகத்தில் சிவகாசியை மையமாக வைத்து பட்டாசு உற்பத்தி தொழில் பெரிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் 8 லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியிருக்கிறது. இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பட்டாசு வர்த்தகம் தமிழகத்தில் தான் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு விற்பனைக்கு உங்கள் மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டிருப்பதாக எனக்கு தெரியவந்தது.
பசுமை பட்டாசுகளை முயற்சிக்கலாம்
காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கலாம் என்று நம்புகிறேன். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதாவது, ஏற்கனவே சில பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேசமயம் பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் குறைந்த அளவிலான மாசையே வெளிப்படுத்துகிறது. எனவே ஒட்டுமொத்தமாக பட்டாசு விற்பனைக்கு தடை விதித்திருப்பது சரியானதாக இருக்காது.
தடையை நீக்க வலியுறுத்தல்
இதுபோன்ற தடைகள் வேறெந்த நாடுகளிலும் இல்லை. உங்கள் மாநிலங்களைப் போல மற்ற மாநிலங்களும் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால், இந்த தொழிலே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை உண்டாகும். இந்திய பண்டிகைகளின் ஓர் அங்கமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். அதிலும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது.
எனவே சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், பொது சுகாதாரம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் நாம் முடிவுகளை எடுக்கலாம். அந்த வகையில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சிவகாசியை மையமாக வைத்து பட்டாசு உற்பத்தி தொழில் பெரிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் 8 லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியிருக்கிறது. இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பட்டாசு வர்த்தகம் தமிழகத்தில் தான் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு விற்பனைக்கு உங்கள் மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டிருப்பதாக எனக்கு தெரியவந்தது.
பசுமை பட்டாசுகளை முயற்சிக்கலாம்
காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கலாம் என்று நம்புகிறேன். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதாவது, ஏற்கனவே சில பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேசமயம் பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் குறைந்த அளவிலான மாசையே வெளிப்படுத்துகிறது. எனவே ஒட்டுமொத்தமாக பட்டாசு விற்பனைக்கு தடை விதித்திருப்பது சரியானதாக இருக்காது.
தடையை நீக்க வலியுறுத்தல்
இதுபோன்ற தடைகள் வேறெந்த நாடுகளிலும் இல்லை. உங்கள் மாநிலங்களைப் போல மற்ற மாநிலங்களும் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால், இந்த தொழிலே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை உண்டாகும். இந்திய பண்டிகைகளின் ஓர் அங்கமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். அதிலும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது.
எனவே சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், பொது சுகாதாரம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் நாம் முடிவுகளை எடுக்கலாம். அந்த வகையில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.