ஆப்நகரம்

ஒடிசாவில் ஊரடங்கு நீடிப்பா? தமிழக முதல்வரின் பதில் இதுதான்!!

ஒடிசாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் விஷயம் தனக்குத் தெரியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கூறினார்.

Samayam Tamil 9 Apr 2020, 6:29 pm
ஒடிசாவில் ஊரடங்கு ஏப்ரல் 30 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இன்று அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நாட்டில் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

சமுதாயத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், சமூக பரவலை தடுக்க மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியா இன்னும் இரண்டாம் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமூகப் பரவல் என்று கூறப்படும் மூன்றாம் கட்டத்தில் சமூகப் பரவல் அதிகமாக இருக்கும் என்பதால், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

lockdown: ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா

எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை காணொளி காட்சி மூலம் நேற்று பிரதமர் கேட்டறிந்தார். இறுதி முடிவு எடுக்கும் முன்பு மாநில முதல்வர்களிடம் ஏப்ரல் 11ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நேற்று இறுதியாக அறிவித்து இருந்தார்.

கொரோனாவிற்கு இந்தியாவில் பலியான முதல் மருத்துவர்!

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒடிசாவில் ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

கோவிட்-19ஆல் காணாமல் போன பெருமை; வைரஸால் நடுங்கிக் கிடக்கும் தூய்மை நகரம்!

அதற்கு, ''இந்த விஷயம் தனக்குத் தெரியாது'' என்று முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்தார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவருக்கு மற்றொரு மாநிலத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்து தெரிவிக்கப்படாமல் இருப்பது நிர்வாகத்தின் குறைபாடு என்று எடுத்துக் கொள்வதா அல்லது அலட்சியம் என்று எடுத்துக் கொள்வதா?

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இன்னும் தமிழகம் இரண்டாம் கட்டத்தில்தான் இருக்கிறது. அடுத்த கட்டத்திற்குள் செல்லாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை'' என்றார்.

அடுத்த செய்தி