ஆப்நகரம்

நாளை ஜல்லிக்கட்டு உறுதி: மதுரை வந்தார் பன்னீர் செல்வம்!

அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க முதல்வர் பன்னீர் செல்வம் மதுரை வந்தார்.

TOI Contributor 21 Jan 2017, 10:07 pm
மதுரை: அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க முதல்வர் பன்னீர் செல்வம் மதுரை வந்தார்.
Samayam Tamil tamil nadu cm ops reaches madurai
நாளை ஜல்லிக்கட்டு உறுதி: மதுரை வந்தார் பன்னீர் செல்வம்!


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் இன்று பிறப்பிக்கப்பட்டது. இதுவே நாளை மறு நாள் தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிரந்தரமானது மாற்றப்படும்.

அவசர சட்டத்தில் மிருக வதையில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தவிர, காட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்குவதற்காகவும் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதையடுத்து, நாளை அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் அதை துவங்கி வைக்க முதல்வர் பன்னீர் செல்வம் மதுரை வந்துள்ளார். இதில், வழக்கம் போல மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என முதல்வர் பன்னீர் செல்வம் கேட்டுள்ளார்.

ஆனால் போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் இயற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்தில் முதல்வர் அளித்த பேட்டியில், " அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நாளை நிச்சயம் நடக்கும். வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதித்து வெளியே வரும்" என்றார்.

அடுத்த செய்தி