ஆப்நகரம்

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு- சுதந்திர தின விழாவில் அறிவித்த தமிழக முதல்வர்!

வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அந்த மாவட்டத்தை மூன்றாக பிரித்து சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

Samayam Tamil 16 Aug 2019, 10:03 am
73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் பழனிசாமி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
Samayam Tamil Palaniswami1


முன்னதாக ராணுவத்தினர், போலீசார், மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோட்டையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

Also Read: தமிழ் பேசும் மக்களிடம் இந்தியை திணிக்காதீர்கள்- கோட்டையில் கொடியேற்றி முதல்வர் பேச்சு!

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என இனி மூன்றாக செயல்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

13 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ள வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 1989ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

Also Read: காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவை பாராட்டியது ஏன்..? ரஜினி சொன்ன பதில்..!

கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலியில் இருந்து தென்காசி தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகவும், விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும் பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

மேலும் நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடந்த 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு மாநிலம் உருவானது குறிப்பிடத்தக்கது.

Also Read: நெல்லையில் கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத் தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது!

அடுத்த செய்தி