ஆப்நகரம்

இவரால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை- செம கடுப்பான முதல்வர் பழனிசாமி!

மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் பற்றி மிகக் கடுமையாக சாடி பேசியுள்ளார்.

Samayam Tamil 13 Aug 2019, 12:38 pm
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 101 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Palaniswami


இதுதொடர்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, கடவுள் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் அடுத்த 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

Also Read: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

விரைவில் மேட்டூர் அணை 120 அடியை எட்டும். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் அனைத்தும் படிப்படியாக தூர்வாரப்படும். காவிரியின் குறுக்கே மொத்தம் 5 தடுப்பணைகள் கட்டப்படும். மத்திய அரசு உதவியுடன் கோதாவரி - காவிரி நதிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Also Read: இறந்து போன தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்; அதிர்ச்சி தரும் பின்னணி!

தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால், அதிமுக கைகட்டி தலைவணங்கி நிற்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

இந்த நாட்டுக்கும், தமிழகத்திற்கும் என்ன செய்துள்ளார். ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்திருக்கிறாரா? காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளாரா? முல்லைப் பெரியாறு பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளாரா?

Also Read: நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஆய்வு!

தமிழக மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யும் திட்டங்களை கொந்து வந்துள்ளாரா? அவர் இருப்பதால் இந்த பூமிக்குத் தான் பாரம் என்று கூறினார்.

அடுத்த செய்தி