ஆப்நகரம்

இன்று அதிகாரப்பூர்வமாக உதயமாகிறது தென்காசி மாவட்டம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

Samayam Tamil 22 Nov 2019, 7:50 am
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.
Samayam Tamil Tenkasi


இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா இசக்கி மஹால் வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.

ஆன்மிகம் தான் என்னை இயக்குகிறது: 24 ஆண்டுகளுக்குப் பிறகு டிடிக்கு ரஜினி பேட்டி!!

இந்த விழா காலை 9.30 மணியளவில் தொடங்குகிறது. முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.80 கோடி மதிப்பில் 5,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

உலக மீனவர் தினம்... எப்போது தொடங்கியது? ஏன்?

இந்த மாவட்டத்தின் கீழ் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 வருவாய் கோட்டங்களில் இடம்பெற்றுள்ள தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்கள் அடங்கும்.

முன்னதாக தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை தமிழக அரசின் தலைமை செயலாளர் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு பயணித்த 6 மாத குழந்தை மரணம்..! விமானத்தில் சோகம்...

அடுத்த செய்தி