ஆப்நகரம்

100 அடியை தாண்டிய மேட்டூர் அணை- பாசனத்திற்காக திறந்துவைத்த தமிழக முதல்வர்!

பாசன வசதிக்காக சேலத்தில் உள்ள மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார்.

Samayam Tamil 13 Aug 2019, 12:15 pm
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையொட்டி காவிரியில் அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து சேருகிறது.
Samayam Tamil CM Open Dam


அங்கிருந்து மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒகேனக்கலில் 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Also Read: இன்று முதல் இங்கெல்லாம் கன மழை கொட்டப் போகுது- எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

இதையொட்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 1.65 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், தற்போது 2.10 லட்சம் கன அடியைத் தாண்டியுள்ளது.

Also Read: மீண்டும் வரலாறு படைத்த மேட்டூர் அணை- நீர்மட்டம் எவ்வளவு தெரியுமா...!

இன்று காலை மேட்டூர் அணை 101 அடியை எட்டியது. இது வரலாற்றில் 65வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து, முதலமைச்சர் பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read: நீலகிரி வெள்ளம்- திமுக எம்எல்ஏ, எம்.பி-க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு!

இதுதொடர்பான நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் அடுத்த 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். விவசாயிகள் நலனிற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 14,000 ஏரிகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான 39,000 குட்டைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனுடன் மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும்.

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும். இதன்மூலம் நமக்கு கூடுதலாக நீர் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் புதிதாக கால்நடை பூங்கா அமைக்கப்படுகிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்காவாக இருக்கும் என்று கூறினார்.

அடுத்த செய்தி