ஆப்நகரம்

இந்த விஷயத்தை எப்படியாவது முடிச்சு கொடுத்திருங்க - மோடியிடம் முதல்வர் கோரிக்கை!

நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், முக்கிய விஷயம் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 16 Jun 2019, 3:38 pm
தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் காலிக் குடங்களை தூக்கிக் கொண்டு, தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார்.
Samayam Tamil PALANISWAMI_0.


அங்கு பல்வேறு நீர்வளத் திட்டங்கள், கோதாவரி - காவிரி இணைப்பு, வைகை மற்றும் குண்டாறுகளில் தண்ணீர் தேவை உள்ளிட்ட விஷயங்களை மத்திய அரசிடம் முன்வைத்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு ஒன்றை பழனிசாமி அளித்தார்.

அதில், காவிரி ஆற்றை புதுப்பிக்கும் வகையிலான “நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு” ஒத்துழைப்பு நல்குமாறு வலியுறுத்தியுள்ளார். காவிரி படுகையில் ரூ.17,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வழிவகை செய்ய வேண்டும். சென்னையில் கிரீன்பீல்டு விமான நிலையத்திற்கு நிதியுதவி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அனுமதி, கிரேட்டர் சென்னை திட்டம், கடலோர மாவட்ட மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் ரூ.7,061 கோடி அளவிலான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

14வது பொருளாதார கமிஷனில் குறைக்கப்பட்ட நிதிகளை ஈடு செய்யும் வகையில் சிறப்பு நிதியாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும். பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.9,148.14 கோடி இன்னும் தர வேண்டியுள்ளது. அதனை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிசாமி கூறியுள்ளார்.

அதேசமயம் உள்துறை அமைச்சர் அமித்சா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரை சந்திக்கையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி