ஆப்நகரம்

O Panneerselvam: நான் வெளிநாடு கிளம்பறேன்; இனி இவர் தான் எல்லாம்... ஓபிஎஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்!

தனது வெளிநாட்டு பயணத்தின் போது, தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் வாய்ப்பை அமைச்சர் ஒருவருக்கு அளிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Samayam Tamil 20 Aug 2019, 12:16 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இருவரும் ஒன்றாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தாலும், அதிமுக என்ற கட்சிக்குள் இரண்டு அணிகளாகத் தான் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Palaniswami


இந்த போக்கு கடந்த மக்களவை தேர்தலையும் விட்டுவைக்கவில்லை. அதில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது. அப்போது ஓபிஎஸின் ஆதரவாளர்களை புறக்கணித்து விட்டு, தனது ஆதரவாளர்களுக்கு மட்டும் சீட் வழங்கியதாக ஈபிஎஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Also Read: அதிமுகவுடன் இணைந்த ஜெ.தீபா பேரவை- இப்படியொரு முடிவெடுக்க என்ன காரணம்? தீபா பேட்டி!

இந்த சூழலில் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்று, தமிழக நலனிற்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் சம்பத், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் செல்கின்றனர்.

Also Read: அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மக்களை தேடிச் செல்கின்றனர்- முதல்வர் பழனிச்சாமி பெருமிதம்!

வெளிநாட்டு பயணத்தில் யார், யாரை சந்திக்க வேண்டும். என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்திட வேண்டும் என்பன பற்றி விவாதிக்க விரைவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொறுப்பு முதலமைச்சராக யார் செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஓபிஎஸிற்கு முழு பொறுப்பையும் ஒப்படைக்க, ஈபிஎஸ் விரும்பவில்லை என்று தகவல்கள் பரவி வருகின்றன.

Also Read: முதலமைச்சருக்கு எதிராக இப்படியொரு திட்டமா! யார் அந்த முன்னாள் அமைச்சர்? ஏன் இந்த அடாவடி?

எனவே தனக்கு நெருக்கமான உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கூட பெற்றுவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்வதாக கட்சி தொண்டர்கள் கவலைப்படுவதாக கூறப்படுகிறது. தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி