ஆப்நகரம்

அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் திட்ட உதவி; மோடிக்கு நன்றி சொன்ன தமிழக முதல்வர்!

கிசான் திட்ட விரிவாக்க விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Jun 2019, 7:21 pm
17வது மக்களவைக்கான தேர்தல் முடிந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றுக் கொண்டது. பிரதமர் மோடி தலைமையில் மே 31ஆம் தேதி, அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil PALANISWAMI_0.


அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கிசான் சம்மான் உதவித் திட்டமானது, எல்லா விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

இதன்மூலம் விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.6,000 உதவித் தொகை பெறுவர். இதற்கான ஒப்புதல் முதல் அமைச்சரவை கூட்டத்தில் பெறப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பிரதமரின் கிசான் திட்டத்தை அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் விரிவாக்கம் செய்ததற்கு தமிழக விவசாயிகள் சார்பாக நன்றி. மேலும் சில்லறை வணிகர்கள், கடைக்காரர்கள், சுய தொழில் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கும் ஓய்வூதிய திட்டத்தை நீட்டித்ததற்கு நன்றி.

இதுபோன்ற நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசிற்கு, தமிழக அரசு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி