ஆப்நகரம்

அதிமுகவுக்கு அடுத்த தலைமை யார்? கூட்டத்தில் முதல்வர் பன்னீர் பங்கேற்பு; சசிகலா வரவில்லை

சென்னை, வானகரத்தில் இன்று கூடும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் பன்னீர் செல்வம் வந்துள்ளார். இன்றைய கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றே தெரிகிறது.

TOI Contributor 29 Dec 2016, 9:48 am
சென்னை, வானகரத்தில் இன்று கூடும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் பன்னீர் செல்வம் வந்துள்ளார். இன்றைய கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றே தெரிகிறது.
Samayam Tamil tamil nadu cm panneer selvam came to aiadmk general council meeting
அதிமுகவுக்கு அடுத்த தலைமை யார்? கூட்டத்தில் முதல்வர் பன்னீர் பங்கேற்பு; சசிகலா வரவில்லை


வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று கூடும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில அளவில் இருந்து சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள 2770 உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டு உள்ளனர். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுபவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சி அடிப்படை உறுப்பினராக இருந்து இருக்க வேண்டும். ஆனால், சசிகலா அவ்வாறு இல்லை. கடந்த 2011ஆம் ஆண்டில் அவரை ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேறும்போது, கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரையும், அவரது சகோதரர் மனைவி இளவரசியையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

அன்றில் இருந்து இன்று வரை இவர்கள் கட்சிப் பொறுப்பில் இல்லை. அப்படி இருக்கும்போது, சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்க முடியாது. மேலும், பொதுச்செயலாளர் பதவியை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றும்போது, தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவையெல்லாம், பின்பற்றப்படுகிறதா? என்பது முக்கியம்.

மேலும், அதிமுக சட்டத்தை சசிகலாவுக்காக மாற்றப்படும் என்று ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா நடராஜன் பொதுச்செயலாளார் பதவிக்கு வருவதற்கு தகுதியற்றவர், அவர் கட்சியின் உறுப்பினர் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் சசிகலா புஷ்பா. அந்த மனுவும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இன்று கூடும் பொதுக்குழு கூட்டம் கூர்ந்து கவனிக்கப்படக் கூடிய ஒன்றாக உள்ளது. கூட்டம் நடைபெறும் வானகரம் வரை எங்கு பார்த்தாலும், ஜெயலலிதாவின் பேனர்கள் மற்றும் பதாகைகள்தான் வைக்கப்பட்டு உள்ளன. சசிகலாவின் புகைப்படம் அதிகமாக இன்று எங்கும் காணப்படவில்லை.

அடுத்த செய்தி